போதைக்கு அடிமைனவர்கள் அனைவருக்கும் சுமையாக உள்ளனர். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருள் விறக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருளை ஒழிக்க புதிய உத்திகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களால் அவர்களது குடும்பங்கள் மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ளவர்களை பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழ்நாட்டில் 16,000 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகபப்டுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வருவது போன்றவற்றையும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் 16,000 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.
