திருவள்ளூர்: செங்குன்றம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி உறவினரை தாக்கிய எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார். உறவினர் தீபேஷை கூலிப்படையை ஏவி தாக்கிய எஸ்.ஐ. ஜெயக்குமார், ஜமித் ரபி, சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினர் தாக்கியதில் இளைஞர் பூபேஷின் வலது கண் பார்வை பறிபோனது.