இதையேற்று இருவரின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாமா என்பது குறித்து நேற்று விசாரணை நடந்தது. இதில், பிரிஜ் பூஷன் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் மோகன் கூறுகையில்,‘‘ புகார் கூறியவர்கள் 5 ஆண்டுகள் சுதந்திரமாக சுற்றி விட்டு தற்போது தங்களுக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்ககூடிய விளக்கமாக இல்லை. வெளிநாடுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து இங்கு விசாரணை நடத்த முடியாது. 3 குற்றச்சாட்டுகளில் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த முடியும். அசோக் ரோடு , சிரி கோட்டை ஆகிய இடங்களில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. சிரி கோட்டையில் கட்டி பிடித்தல் சம்பவம் நடந்துள்ளது.பாலியல் உள்நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணை கட்டிபிடிப்பது குற்றம் ஆகாது’’ என்றார்.
The post பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல: பாஜ எம்பி வக்கீல் கோர்ட்டில் வாதம் appeared first on Dinakaran.