கோயிலில் இருந்த பக்தர்கள், உண்மையான தீவிரவாதிகள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக எண்ணி பீதியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் அலறினர். திடீரென கோயிலில் இருந்து சிலரை போலீசார் (தீவிரவாதிகள் உடையில்) பிணைக்கைதிகளாக பிடித்தனர். அதனால் கோயில் வளாகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில், கோபமடைந்த பிரசாந்த் குல்கர்னி என்ற இளைஞர், போலி துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டிய ‘டம்மி’ தீவிரவாதியை அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
அதன்பின் ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார், தாங்கள் போலி ஒத்திகை நடத்தி வருவதாக மக்களிடம் தெரிவித்தனர். இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post கோயிலில் ஒத்திகை பார்த்த போது ‘டம்மி’ தீவிரவாதிக்கு ‘பளார்’ விட்ட இளைஞர்: மக்களை பிணைக்கைதிகளாக பிடித்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.