அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவலர்களே ஹெல்மெட் இன்றி பயணம் செய்வது ஏற்புடையது இல்லை என்றார். இதை கேட்ட எஸ்ஐ கனகராஜ், எஸ்பியின் உத்தரவிற்கு கீழ்பணிவதாக கூறினார். உடனே எஸ்பி ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றதற்காக உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்து, அதை கட்டிய ரசீதை காட்டிவிட்டு பணியில் சேருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்ஐ கனகராஜ் தனக்கு தானே ரூ1000 அபராதம் விதித்து, அபராத தொகையை கட்டினார். அதற்கான ரசீதை நேற்று எஸ்பியிடம் காட்டிவிட்டு பணியில் சேர்ந்தார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஹெல்மெட் அணியாததால் எஸ்பி நடவடிக்கை தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட எஸ்ஐ appeared first on Dinakaran.