கோவை மண்டல டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம்

கோவை, ஆக. 3: கோவை மண்டல டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. எல்.பி.எப் தொழிற்சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எல்.பி.எப் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார். தொமுச பேரவை துணை தலைவர் மு.ரத்தினவேல் சிறப்புரையாற்றினார். இதில், ‘’வெள்ளையனே வெளியேறு முழக்கமிட்ட நாளான ஆகஸ்ட் 9-ல் ஒன்றிய மோடி அரசை கண்டித்து சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தில், கோவை மண்டலத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், எல்.பி.எப் மாநில பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம், சிஐடியு துணை பொதுச்செயலாளர் ஜான் அந்தோணி சாமி, எல்.எல்.எப் மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, ஏஐடியுசி செயலாளர் மணிகண்டன், எல்.பி.எப் ஈரோடு கோபால், திருப்பூர் தமிழரசு, கரூர் ராஜேஷ், கோவை ராக்கிமுத்து, நீலகிரி தினேஷ், எல்பிஎப் கவுன்சில் தலைவர் ஆனந்த், பொருளாளர் நாசர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

The post கோவை மண்டல டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: