வனப்பகுதியின் உள்ளே வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளும் ஏராளமான வன விலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். சாலை ஓரங்களில் மேயும் காட்டு யானைகள், மான் கூட்டங்களை படம் பிடிக்கும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, வாகனங்களில் இருந்து இறங்கவோ வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதற்காக தனி குழுவினர் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் சாலை ஓரத்தில் மேயும் காட்டு யானை ஒன்று சாலையில் நிற்கும் வாகனங்களை துரத்த தயாரான காட்சியும், பசுமையான புல்வெளிகளில் மேயும் மான் கூட்டமும் பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்தியது.
The post முதுமலையில் பசுமை திரும்பியது பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விலங்குகள் appeared first on Dinakaran.