கும்மிடிப்பூண்டி பெரிய நத்தம் ஊராட்சியில் துலுக்காணத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் ஊராட்சியில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோயிலில் 9ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் 140 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஸ்ரீ துலுக்காணத்தம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதி நிகழ்வையும், வானவேடிக்கையும் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழா ஏற்பாடுகளை பெரிய நத்தம் ஊராட்சி பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பெரிய நத்தம் ஊராட்சியில் துலுக்காணத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: