நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவார்: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கணிப்பு

மும்பை: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். ஒன்றிய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் , “பாஜ கூட்டணியில் நிதிஷ் குமார் இருந்தபோது பீகாரில் நடந்த தேர்தலில் பாஜ அதிக இடங்களை வென்றது. ஆனாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்கினோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவர் யார் என்பதிலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலும் அந்த கூட்டணியில் பிளவுகள் உள்ளன. இந்தியா என்ற பெயரில் நிதிஷ் குமாருக்கு விருப்பமில்லை. மும்பையில் நடக்கவுள்ள கூட்டத்துக்கு நிதிஷ் குமார் நிச்சயம் செல்ல மாட்டார். நிதிஷ் குமார் விரைவில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்” இவ்வாறு தெரிவித்தார்.

The post நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவார்: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: