அந்த வகையில் அர்பத் யூசுப், தடை செய்யப்பட்ட அல்-பத்ருவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீர் எல்லையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் சோதனையிட முயன்ற போது, அவர்கள் மீது இரண்டு முறை கையெறி குண்டுகளை வீசினார். ராஜ்போராவில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீதும், பின்னர் ஹவால், ராஜ்போரா புல்வாமாவில் உள்ள சிஆர்பிஎப் முகாமிலும் கையெறி குண்டுகளை வீசிய குற்றவாளி ஆவார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முக்கிய தீவிரவாதியின் போஸ்டர்களை நகர்பகுதியில் ஒட்டியுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.
ராணுவ வீரர் கடத்தல்: குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜாவேத் அஹ்மத் வானி (25), லடாக்கில் பணியாற்றி வந்தார். அவர் உள்ளூர் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக விடுமுறையில் குல்காம் வந்தார். அவர் தனது காரில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது, தீவிரவாத கும்பலால் அவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரில், ராணுவ வீரரின் செருப்புகள் கிடந்தன. ரத்த கறைகளும் காணப்பட்டது. தகவலறிந்த மக்கள், அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ஜாவேத் அஹ்மத் வானியை மீட்பதற்காக, உள்ளூர் போலீசும் பாதுகாப்பு படையினரும் தீவிர ேதடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
The post பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் ஸ்ரீநகரில் ‘ஹைப்ரிட்’ தீவிரவாதி கைது: பாதுகாப்பு படை அதிரடி appeared first on Dinakaran.