பொன்னமராவதியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, ஜூலை 30: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொன்னமராவதி தாலுகா கேசராபட்டி சி.டி. இண்டர் நேஷனல் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், மாணவ மாணவிகளுக்கு தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட உணவு குடிநீர், நாய்கடி மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார், இந்நிகழ்வில் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர். விபத்துகளை குறைக்க இனியாவது போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மோட்டார் வானக சட்டதிட்டங்களை எளிதில் மக்கள் புரிந்துகொள்ளும்படி கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும்.

The post பொன்னமராவதியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: