இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முன்தினம் பாமக போராட்டத்தால் வாய்க்கால் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை வளையமாதேவி பகுதியில் கரிவெட்டி கிராமம் செல்லும் பாதை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பின்னர், அந்த சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. 10க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post போராட்டங்கள், வன்முறை சம்பவங்களுக்கு இடையே வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி மீண்டும் துவக்கியது: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.