உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் டிரோனை ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் துறைமுக நகரங்களை ரஷ்யா குறிவைத்து தாக்கி வருகின்றது. இந்நிலையில் உக்ரைனும் டிரோன் மூலமான தாக்குதலை தொடர்ந்து வருகின்றது. ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 உக்ரைன் டிரோன்கள் ரஷ்ய விமான படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து திங்களன்றும் உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதலை முன்னெடுத்தது. இது பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு அருகே விழுந்தது. மேலும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையே டிரோன் சிக்கியது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்றும் தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த வந்த டிரோனை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் யாரும் காயமடையவில்லை. டிரோன் எங்கு சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

The post உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா appeared first on Dinakaran.

Related Stories: