பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் புலி உயிரிழந்தது தொடர்பாக 7 பேர் கைது

ஈரோடு: பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் புலி உயிரிழந்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் கடந்த 25ம் தேதி 6 வயது ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழந்தது. மானை வேட்டையாடுவதற்காக வைத்த சுருக்கு கம்பியில் புலி சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பவானிசாகர் அணை வனப்பகுதிகளில் இந்த கும்பல் வழக்கமாக மான் வேட்டையாடி கொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

The post பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் புலி உயிரிழந்தது தொடர்பாக 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: