சென்னை தேனாம்பேட்டையில் நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண் சிக்கினார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் நடிகை ஷோபனா வீட்டில் ரூ.41,000 திருடிய பணிப்பெண் சிக்கினார். ஷோபனாவின் தாயாரை கவனித்துக்கொள்ள வீட்டிலேயே தங்கி பணிபுரிந்த விஜயா என்ற பெண் கைவரிசையில் ஈடுபட்டுள்ளார். ஷோபனா வீட்டில் சிறுக சிறுக திருடிய பணத்தை கார் ஓட்டுனர் மூலம் ஊரில் உள்ள தனது மகளுக்கு ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் திருடியதை பணிப்பெண் ஒப்புக்கொண்டார். உண்மையை ஒத்துக்கொண்டதால் பணிப்பெண்ணை மன்னித்து தொடர்ந்து பணிபுரிய ஷோபனா அனுமதித்தார்.

The post சென்னை தேனாம்பேட்டையில் நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: