அதனை தொடர்ந்து கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டதும், மஞ்சு விரட்டுக்கு அழைத்து வரப்பட்ட அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் தொழுவில் இருந்தும் மற்ற வயல்வெளி பகுதிகளில் இருந்தும் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடப்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
The post காரைக்குடி அருகே 20 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்டிய பொய்யலூர் மஞ்சுவிரட்டு: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.