மேலும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான 9 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘நாங்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதே கிடையாது. ஆனால் இலங்கை கடற்படையினர் நமது கடல் பகுதியிலேயே வந்து கைது செய்கின்றனர். இதனால் மீன்பிடி தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் இவர்களில் கைது மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது!! appeared first on Dinakaran.