4 கோடிக்கும் அதிகமானோர் ஐடி ரிட்டர்ன் தாக்கல்

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா நேற்று அளித்த பேட்டியில், ‘‘2022-23ம் நிதியாண்டிற்கான ஐடி ரிட்டர்னை 4 கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 4 நாட்களுக்கு முன்பாக எட்டப்பட்டுள்ளது. இதுவரை ரிட்டன் தாக்கல் செய்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு ரீபண்ட் தொகை திருப்பி தரப்பட்டுள்ளது. அதாவது, ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக ரீபண்ட் உரியவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 7.78 கோடி பேர் ஐடி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் அதிகம்’’ என்றார். வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 31 என்பது குறிப்பிடத்தக்கது.

The post 4 கோடிக்கும் அதிகமானோர் ஐடி ரிட்டர்ன் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: