இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தினார். இச்சூழ்நிலையில் இக்கொடுமையைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மகளிர் அணியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை காணவில்லை என்ற பதாகைகள், மெழுகுவர்த்தி கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
The post மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.