டெல்லி சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யாசின் மாலிக் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆஜர்படுத்தியது கடுமையான பாதுகாப்பு விதிமீறல் என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிறை துணை கண்காணிப்பாளர் உட்பட 4 அதிகாரிகளை சிறை துறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: