ஆடி வெள்ளியால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு

திண்டுக்கல், ஜூலை 21: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா பூ மார்க்கெட் வளாகம் செயல்படுகிறது. இங்கு பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து விற்பனையானது.

நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700 வரை விற்பனையானது. இதேபோல் சம்பங்கி பூ ரூ.150க்கும், மல்லிகை பூ ரூ.700க்கும், ரோஜாப்பூ ரூ.90க்கும், முல்லை பூ ரூ.300க்கும், ஜாதிபூ ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.250க்கும், கோழிகொண்டை ரூ.60க்கும்., செண்டுமல்லி ரூ.80க்கும், விருட்சி பூ ரூ.120க்கும், காக்கரட்டான் ரூ.250க்கும், வாடாமல்லி ரூ.10க்கும், மரிக்கொழுந்து ரூ.90க்கும் அரளி பூ ரூ.130க்கும், தாமரைப்பூ ரூ.5க்கும் விற்பனையானது.

The post ஆடி வெள்ளியால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு appeared first on Dinakaran.

Related Stories: