கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார். உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால் தான் ஒரு வல்லரசாக முடியும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும். அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யாவில் இந்தியாவினுடைய ஏராளமான திட்டங்களை கொடுத்து அதன் மூலமாக பொருட்களை வாங்குகிறார். இது வளர்ச்சியடையாத நாடுகள் செய்யக் கூடிய விஷயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வந்தே பாரத் ரயில்கள் ரஷ்யாவில் தயாரிப்பு மோடியின் செயல் அடிமை இந்தியாவை உருவாக்கும்: கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.