இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முனீஸ்வரியிடம் பள்ளி தலைமை ஆசிரியை, விலங்கியல் பாட பிரிவில் பங்கேற்க தாமதம் குறித்து கண்டித்ததுடன் டிசி வழங்கி விடுவதாக மிரட்டினாராம். டிசி வழங்கி விட்டால் தாய்க்கு அவமானமாகி விடும் என்று கருதிய முனீஸ்வரி, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் முனீஸ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் ‘பள்ளியில் ஏற்பட்ட தாமதம் குறித்து உதவி தலைமை ஆசிரியை, சக மாணவிகள் முன்னிலையில் என்னை திட்டினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியை வந்த பின்னர் உனக்கு டிசி (பள்ளி மாற்றுச்சான்றிதழ்) கொடுத்திருவேன் என்றார். எனக்கு டிசி கொடுத்தால் என் தாய்க்கு தான் அவமானமாகி விடும். நான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். படிக்க முடியவில்லை. உங்களை விட்டு பிரிகிறேன்’ என எழுதியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட உதவி தலைமை ஆசிரியை இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
The post டிசி கொடுப்பதாக ஆசிரியை மிரட்டியதால் மாணவி தற்கொலை: உதவி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.