கலெக்டர் துவக்கி வைப்பு கரூரில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வாயில் முழக்க ேபாராட்டம்

 

கரூர், ஜூலை 18: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. கரூர் அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற இந்த வாயில் முழக்க போராட்டத்திற்கு கரூர் கிளைத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். முனைவர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். கரூர் கிளையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாயில் முழக்க போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாதிரி பாடத்திட்டம் எனும் தமிழக அரசால் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்டு வரும் பொது பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்த ஜேஏசி பொதுக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுதும் கோரிக்கை அட்டை அணிந்து அரசு கல்லு£ரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலெக்டர் துவக்கி வைப்பு கரூரில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வாயில் முழக்க ேபாராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: