மது விற்ற 2 பேர் கைது

 

தேவதானப்பட்டி, ஜூலை 17: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ.,மணிகண்டன் மற்றும் போலீசார் மேல்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்மங்கலம் ஒத்தவீடு அருகே நின்று கொண்டிருந்த அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த சொக்கப்பன்(60) என்பவரை சோதனை செய்ததில் அவர் அனுமதியின்றி விற்பனைக்காக 15 மது பாட்டில்கள் வைத்திருந்தார். போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெயமங்கலம் நான்கு ரோடு அருகே காந்திநகர் காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி(72) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 14 மது பாட்டில்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தார். மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

The post மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: