இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, விவேக் தங்கா, மணீஷ் திவாரி, கேடிஎஸ் துளசி ஆகியோர் அடங்கிய குழுவினர், பொது சிவில் சட்டம் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து விவாதித்தனர். இந்த விஷயத்தில் நுணுக்கமான நிலைப்பாட்டை எடுக்கவும், வரைவு மசோதாவை ஆய்வு செய்த பின்னரே கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை கட்சித் தலைமைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post பொது சிவில் சட்டம் குறித்து காங். கட்சியின் நிலைபாடு என்ன?: மூத்த தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.