தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

 

வேதாரண்யம், ஜூலை 15: வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை வகித்தார். ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி கூட்டப் பொருள் குறித்து விளக்கிப் பேசினார். துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, கல்வியாளர் ஆர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் அம்சவல்லி, அனீஸ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில். இப்பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைப்பது. இல்லம் தேடி மையங்களை பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் மாணவர் வருகை கற்பித்தல் பணி உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உதவுவது. மாற்று திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்துவது. எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் அதன் மதிப்பீட்டு முறைகள் குறித்தும் பெற்றோர்களிடம் விளக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், பள்ளி ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

The post தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: