இதனிடையே அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் தான் என்றும் உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது எனும் போது இதைவிட என்ன பெரிய பெருமை இருக்க முடியும் எனக் கூறினார்.இந்தியாவில் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் யுபிஐ தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ள மோடி, வரும் நாட்களில் இது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும் எனவும் அப்போது இந்திய சுற்றுலா பயணிகள் ரூபாயில் பணத்தை செலுத்த முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி தனது உரையின் போது, “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – எனும் திருக்குறளை குறிப்பிட்டு, இந்திய பொருளாதார உயர்வுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கும் முக்கியம் என குறிப்பிட்டு பேசினார். மேலும் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த விழாவில் குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் வரலாற்று நிகழ்வையும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
The post உலகிலேயே பழமையான மொழி தமிழ் தான்.. இதைவிட என்ன பெரிய பெருமை இருக்க முடியும் : பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.