இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் விண்ணப்பங்களை பெற வேண்டும். தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பங்களை வீடுகளுக்கு சென்று விற்பனையாளர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.