ஆனால் 2020 மார்ச்சில் வழங்கப்பட்ட உத்தரவில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே வழக்கு நடைபெறும் என என்.வி ரமணா அறிவித்தார். அதன் பிறகு என்.வி ரமணா, யு.யு லலித் ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக பதவியேற்று ஓய்வும் பெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட படாமலேயே இருந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பிறகு இந்த மனு இன்று விசாரிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மனு மீதான விசாரணையை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
The post ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.
