ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று கூடுகிறது!!

டெல்லி : ஜிஎஸ்டி கவுன்சிலிங் 50-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கவுன்சில் தலைவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். சிமெண்ட், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டி அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து இதில் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மறு ஆய்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஆன்லைன் கேமிங் மற்றும் வர்த்தகம் குறித்தும் அதற்கான வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று கூடுகிறது!! appeared first on Dinakaran.

Related Stories: