கரூரில் பஞ்சமி நில மீட்பு கூட்டு இயக்க ஆலோசனை கூட்டம்

 

கரூர், ஜூலை11: கரூரில் பஞ்சமி நில மீட்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் மாநில மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். மாநில தொண்டரணி செயலாளர் நிஷோக்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில், பஞ்சமி நில மீட்டு கூட்டு இயக்கத்தில் உள்ள சமநீதிக் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் ஆறுமுகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.ஆகஸ்ட் 12ம்தேதி மதுரையில் நடைபெறும் பஞ்சமி நில உரிமை மீட்பு மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கரூரில் பஞ்சமி நில மீட்பு கூட்டு இயக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: