சென்னையில் ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்றவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்றவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ஐகோர்ட் ரத்து செய்தது. பரங்கிமலையைச் சேர்ந்த சதீஷ் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை பரங்கிமலையில் காவலர் குடியிருப்பில் வசித்த மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார். கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவல்களின் முரண்டுபாடு என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முரண்பாடு குறித்து காவல்துறையினர் போதிய விளக்கம் அளிக்காததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னையில் ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்றவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: