இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ24 கோடி இழப்பீடு

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த காம் ஜூதி. இவர் கடந்த 2013ம் ஆண்டு ராயல் மெயில் நிறுவனத்தில் மார்க்கெட் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் இருந்த சக ஊழியர் சட்டவிரோதமான முறையில் போனஸ் பெற்றுள்ளதை நிறுவன தலைவரிடம் முறையிட்டார். ஆனால் அவர் காம் ஜூதியை மிரட்டி துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் காம் ஜூதிக்கு சாதகமாக தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ரூ.24கோடி இழப்பீடு தொகையை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

The post இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ24 கோடி இழப்பீடு appeared first on Dinakaran.

Related Stories: