கண்ணன் கோயில் கும்பாபிஷேகம்

 

சாயல்குடி, ஜூலை 8: கே.கரிசல்குளம் வேணுகோபாலகிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலாடி அருகே கே.கரிசல்குளம் கிராமத்திலுள்ள வேணுகோபாலகிருஷ்ணன் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார கிராமதேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் நேற்றுமுன்தினம் துவங்கியது.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. நேற்று யாக சாலையிலிருந்து கும்ப குடங்கள் புறப்பட்டு கோயில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபராதணைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கரிசல்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள்கலந்து கொண்டனர்.

The post கண்ணன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: