பர்கூர் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினிலாரி

 

அந்தியூர், ஜூலை 8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை ஈரோட்டை சேர்ந்தவர் லாரி டிரைவர் மாதேவன் (23). இவர் ஈரோட்டில் இருந்து பர்கூர் மலபை்பாதை வழியாக மினி லாரியில் எம் சாண்ட் ஏற்றிய பாரத்துடன் நேற்று மாலை புறப்பட்டார். செட்டிநொடி என்ற இடத்தில் வந்தபோது வேறு வாகனத்துக்கு வழிவிட்டார். அப்போது மினிலாரி நிலைதடுமாறி சுவர், மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் வளைந்ததால் 50 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்தது. இதில் லாரியின் முன்சக்கரங்கள் கழன்றி ஓடின. அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post பர்கூர் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினிலாரி appeared first on Dinakaran.

Related Stories: