திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

குமரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து  அதிகரித்து உள்ளது. இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகையும்  அதிகரித்து வருகிறது. நேற்றும் மழை காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. வெள்ளி நிறத்தில் கொட்டிய தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள்  குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் அருவியில் மேல்புறத்தில்  உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இயற்கை அழகை ரசித்தபடி குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

Related Stories: