லாரி கேபின்களில் ஏசி ஒன்றிய அரசு ஒப்புதல்: அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: லாரி கேபின்களில் ஏசி வசதிகளை கட்டாயம் பொருத்துவதற்கான வரைவு அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுதொடர்பாக ஒன்றிய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என்2 மற்றும் என்3 வகைகளின் கீழ் உள்ள லாரிகளில் கேபின்களில் ஏர் கண்டிஷனிங் வசதி அமைப்பதை கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பை உறுதி செய்வதில் லாரி டிரைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த முடிவு லாரி ஓட்டுநர்களுக்கு வசதியான வேலை நிலைமைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. அதன் மூலம் அவர்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. ஓட்டுநர் சோர்வு பிரச்னையை நிவர்த்தி செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post லாரி கேபின்களில் ஏசி ஒன்றிய அரசு ஒப்புதல்: அமைச்சர் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: