திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வருவதால், கண்ணூர் அருகிலுள்ள மாஹே (புதுச்சேரி பிராந்தியம்) பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மண்டல நிர்வாகி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில், மாஹே பகுதியில் மட்டும் 221.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.