இதன்காரணமாக பரம்பிக்குளம் பாசன திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 147 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வால்பாறை சுற்று பகுதியில் கடும் மூடுபனி நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 88, லோயர் நீரார் 85, சோலையார் அணை 70, சின்னக்கல்லாரில் 147 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் வால்பாறையில் பெய்துவரும் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
The post தென்மேற்கு பருவமழை தீவிரம்: வால்பாறையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.