நாளை காலை 9 மணி அளவில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் மெய்நிகர் அரங்கம் திறக்கப்பட உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் 3டி கண்ணாடி மூலம் திரையை பார்க்கும்போது கலைஞரை நேரில் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திறப்புவிழா ஏற்பாடு அண்ணாமலை மன்றத்தில் நடந்து வருகிறது. தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என சென்னை கிழக்கு மாவட்ட திமுக அறிவித்துள்ளது.
The post ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு appeared first on Dinakaran.