ராகுல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

ராஞ்சி: மோடி பெயர் குறித்து 2019ம் ஆண்டு நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பிரதீப் மோடி என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை ராஞ்சியில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் ராகுல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்கே. திவேதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ராகுல் நேரில் ஆஜராக தேவையில்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

The post ராகுல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு appeared first on Dinakaran.

Related Stories: