கர்நாடகாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் திமுக வலியுறுத்த வேண்டும்.
பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களையும் நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
The post மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.