இந்த நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்காக 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறை சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் கல்வியாண்டுகளில் பிளஸ்2 முடித்தவர்கள், அதற்கான ஆளறிச் சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை.
அவர்களின் தகுதிகள் பள்ளிக்கல்வித் துறையின் ‘எமிஸ்’ புள்ளி விவரங்களின் மூலம் சரிபார்க்கப்படும். அவர்களை தவிர 2021-22-ம் கல்வியாண்டுக்கு முன்பு பிளஸ்2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பிளஸ்2 முடித்ததற்கான ஆளறிச் சான்றிதழை பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு +2 தேர்ச்சி பெற்றவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் சேர ஆளறி சான்று வழங்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.