இந்த குறும்படம் முதுமலை யானை தம்பதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். வனவிலங்கு பாதுகாப்பு தொண்டு நிறுவனமான யானை குடும்பத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் யானை சிலை விருதாக வழங்கப்பட்டது. மேலும் 70 ஆதிவாசி கலைஞர்களின் உண்மையான யானைகள் கூட்டமைப்புக்கு(டிஆர்இசி) மார்க் ஷான்ட் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. டிஆர்இசி கடந்த 5 ஆண்டுகளாக லென்டானா எனப்படும் செடியை கொண்டு யானை சிற்பங்களை வடிவமைக்கும் உள்நாட்டு கைவினைஞர்களின் பிரதிநிதியாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
The post முதுமலை யானை தம்பதி கதையான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குநருக்கு விருது: இங்கிலாந்து அரசர் 3ம் சார்லஸ் வழங்கினார் appeared first on Dinakaran.