புதுக்கோட்டை மாவட்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2021-ல் 5 பேருக்கும், 2022-ல் ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் வீடுகளை கட்டி முடித்து விட்டனர். 3 பேர் பணியை தொடங்கவில்லை. 6வதாக முத்துக்கருப்பன் மனைவி கருப்பாயி என்பவரின் பெயரில் வழங்கப்பட்ட பணி ஆணையின்படி வேலை நடைபெற்று வருகிறது. அவருக்கு இரு முறை அரசு நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக, உள்நோக்கத்துடன் அவரது வீட்டுக்கு பாஜவினர் பூமி பூஜை போட்டுள்ளனர். போலியாக வீடு கட்டுவதற்கான ஆணை ஒன்றையும் அந்நிகழ்ச்சியின்போது பயனாளி கருப்பாயியிடம் வழங்கியுள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, ஊராட்சி மன்றத்துக்கோ எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றும் மாநில அரசை அவமானப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீட்டுக்கு போலி ஆணை வழங்கி ஒன்றிய அமைச்சர் பூமி பூஜை: புதுகை கலெக்டரிடம் ஊராட்சி உறுப்பினர் புகார் appeared first on Dinakaran.