மனிதநேயம், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பதில் இந்தியர்கள் முன்மாதிரியானவர்கள்: காதர்மொகிதீன் பக்ரீத் வாழ்த்து

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் வெளியிட்ட பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் ஒருதாய் மக்கள்; பல மொழி, பலமதம், பல கொள்கை, பல கலாச்சாரம் உள்ளவர்கள்; ஆனால், மனிதநேயத்தில், மனிதாபிமானத்தில், உதவுவதில், உபசரிப்பதில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில், எல்லாருக்கும் முன்மாதிரியாக திகழ்வதில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள்தாம்.

இத்தகைய சிறந்த நாட்டு மக்களாக வாழும் முஸ்லிம் சமுதாயம், தனது ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறது. ஈத் பெருநாள் வாழ்த்துகளை எல்லோருக்கும் கூறுவோம். இந்த புனிதமான தியாகத் திருநாளில் ஒற்றுமை பேணிடவும், ஒழுங்கு முறையில் வாழ்ந்திடவும், உள்ளும் புறமும் அமைதியை உருவாக்கிடவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு, நட்புநலம் பெருகிட பாடுபடவும், உறுதி ஏற்போம்.

The post மனிதநேயம், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பதில் இந்தியர்கள் முன்மாதிரியானவர்கள்: காதர்மொகிதீன் பக்ரீத் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: