விளக்கத்தை நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் ஞானதிரவியம் எம்.பி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திருச்சபையின் யோவான் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஞான திரவியம் நீக்கப்பட்டார்.புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஞானதிரவியம், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்துக்கு நோட்டீஸ்: திமுக பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை appeared first on Dinakaran.