வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர்: திதிருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள் நெய், தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்டவைகளில் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடனையும் செலுத்தி, பிரார்த்தனை செய்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் 12.30 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், பழங்கள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் யோக பைரவர் விபூதி காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அஷ்டமியை முன்னிட்டு சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாம் வழங்கப்பட்டது.

The post வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: