வதிலை.யில் முப்பெரும் விழா

வத்தலக்குண்டு, ஜூன் 27: வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பாக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, உறுப்பினர்களுக்கு கேடயம் வழங்கும் விழா, உறுப்பினர்கள் பிறந்தநாள் கொண்டாடும் விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனிராஜன், மனவளக்கலை பேராசிரியை மைதிலி, வரும் ஆண்டு தலைவர் வினோத், செயலாளர் திருச்செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் ஜெர்மன் ராஜா வரவேற்றார். விரிவாக்க தலைவர் கென்னடி சிறப்புரையாற்றினார். விழாவில் நிர்வாகிகளை பலர் பாராட்டினர். பின்னர் உறுப்பினர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் முரளி, செந்தில்குமார், ஆண்டவர், கலைச்செல்வன், ஆசிக், இன்பராஜ், நித்திஷ், நாகேந்திரன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி சக்திவேல் நன்றி கூறினார்.

The post வதிலை.யில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: